Paristamil Navigation Paristamil advert login

பப்புள் கம் மெல்லுவது நல்லதா?

பப்புள் கம் மெல்லுவது நல்லதா?

12 மார்கழி 2014 வெள்ளி 10:22 | பார்வைகள் : 18682


 பப்புள் கம் மெல்லுவதையே பழக்கமாகத் கொள்ளாத வரை நல்லதே. தீமை ஏதுமில்லை என்றாலும் எதிலும் அளவுக்குள் இருப்பது நல்லது தானே!

 
பப்புள்கம் மெல்லும்போது டென்ஷன் குறைவதாகச் சொல்லுகிறார்கள். வழக்கமாக மெஷின் கிரைண்டிங் இரைச்சல்தான் அதிகம் டென்ஷன் தருவது. இருபது பேர்களை மெஷின் இரைச்சலில் இருக்க வைத்து அதில் பத்து பேர்களுக்கு பப்புள்கம் மெல்லக் கொடுத்து மீதிப்பேர்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை.
 
இரண்டு கூட்டத்தாரர்களின் மூளையிலும் டென்ஷனுக்கான அடையாளங்களைப் பார்த்தபோது மெல்லுபவர்களிடம் டென்ஷன் பாதியாகக் குறைந்து காணப்பட்டது. எனவே டென்ஷன் குறைகிறது என்று அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டாலும் ஆபத்துதான்.