வெற்றிகரமாக மாற்றியமக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை!
31 ஆவணி 2019 சனி 03:39 | பார்வைகள் : 13902
நிலவை நெருங்கி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை நான்காவது முறையாகவும் வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது.
ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் திகதி சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.ஷ
இந்நிலையில், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நான்காவது முறையாக சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.
இன்னும் ஒருமுறை சுற்றுவட்டப் பாதை மாற்றியமைக்கப்பட்டதன் பின்னர் நிலவில் சந்திரயான் தரையிறங்கும்.
செப்டம்பர் 7ஆம் திகதி, சந்திரயான் 2 நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர் நிலவில் லேண்டர் மற்றும் ரோவர் இறங்கி நிலவிலுள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan