சந்திராயன்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு!
18 கார்த்திகை 2019 திங்கள் 05:57 | பார்வைகள் : 12978
சந்திராயன்-3 விண்கலத்தை அடுத்த ஆண்டு நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை இஸ்ரோ நிலவிற்கு அனுப்பியது.
இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதனையடுத்து சந்திரயான்-1 விண்கலம் 2009 ஆம் ஆண்டு தனது ஆயுட்காலம் நிறைவடைந்து.
பின்னர் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இஸ்ரோ அனுப்பியது. ஆனால், நிலவில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது, அதனுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றிவந்து நல்ல முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சந்திராயன்-3 திட்டம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினர்.
இதன்போது, சந்திரயான்-3 மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். எனவே இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் செயற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan