Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் பிரான்ஸ் அணிக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் புயல் அச்சுறுத்தல்!!

மீண்டும் பிரான்ஸ் அணிக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் புயல் அச்சுறுத்தல்!!

25 ஆனி 2026 வியாழன் 15:31 | பார்வைகள் : 438


பிரான்ஸ் அணி (Les Bleus) உலகக் கோப்பை குழுநிலை இறுதிப் போட்டியில் வெள்ளிக்கிழமை மாலை Bostonஇல்  (பிரான்ஸ் நேரம் இரவு 9 மணி; உள்ளூர் நேரம் பிற்பகல் 3 மணி) நோர்வே அணியை எதிர்கொள்கிறது. ஆனால், போட்டி நடைபெறும் நேரத்தில் மீண்டும் இடியுடன் கூடிய மழைப மற்றும் புயல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், போட்டி பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அமெரிக்க தேசிய வானிலை சேவையின் தகவலின்படி, வெள்ளிக்கிழமை Massachussetts பகுதியில் கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் புயல் உருவாகலாம். காலை வானிலை சீராக இருந்தாலும், பிற்பகலில் மேகமூட்டமும் மழையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BBC Weather போட்டி தொடங்கும் நேரத்தில் தனித்தனி இடியுடன் கூடிய மழை மற்றும் புயல் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது. AccuWeather கணிப்பின்படி, அந்நேரத்தில் இடியுடன் கூடிய மழைப்புயல் ஏற்படும் சாத்தியம் 26% ஆக உள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு விதிகளின்படி, மைதானத்திலிருந்து 13 கிலோமீட்டர் சுற்றளவில் மின்னல் பதிவானால் போட்டி உடனடியாக 30 நிமிடங்களுக்கு நிறுத்தப்படும். மீண்டும் மின்னல் பதிவானால், அந்த 30 நிமிடக் கணக்கீடு புதிதாக தொடங்கும். இதனால் போட்டி தாமதமாகும் வாய்ப்பு உள்ளது.