Paristamil Navigation Paristamil advert login

தொடருந்து பாதுகாப்பு காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள்!!

தொடருந்து பாதுகாப்பு காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள்!!

30 பங்குனி 2026 திங்கள் 14:22 | பார்வைகள் : 457


மார்ச் 30 முதல், SNCF மற்றும் RATP நிறுவனங்களின் உள்துறை பாதுகாப்பு சேவையினருக்கு சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதில் விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை போக்குவரத்து அமைச்சர் பிலிப் தபரோ (Philippe Tabarot) அறிவித்துள்ளார்.

புதிய அதிகாரங்களில் உடல் சோதனை, உடல் பரிசோதனை (palpation), ஆயுதங்கள் மற்றும் ஆபத்தான பொருட்களை பறிமுதல் செய்வது, தொடருந்து நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களின் அருகில் ரோந்து செலுத்துவது போன்றவை அடங்கும். சட்ட அமுலாக்க உத்தரவின்படி SNCF மற்றும் RATP நிறுவனங்களின் 4,000 பாதுகாப்பு பணியாளர்களுக்கு விரைவாக செயல்பட அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த அதிகாரிகளுக்கு, "விரும்பத்தகாத நபர்கள்" என கருதப்படும் சிலருக்கு போக்குவரத்து இடங்களில் நுழைவதைத் தடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அனுமதியின்றி பொருட்களை விற்பனை செய்வோரிடமிருந்து பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரமும், அதுவும் போக்குவரத்து வலையமைப்புகளின் அருகிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சக அறிக்கை கூறுகிறது.

மேலும், தனியார் பாதுகாப்பு பணியாளர்களின் அதிகாரங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அவர்கள் இப்போது பொது ஒழுங்கை பாதிக்கும் நபர்களை போக்குவரத்து பகுதிகளிலிருந்து மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட முடியும். இந்த உத்தரவு, அவர்களின் பயிற்சி முறைகளையும் விரிவுபடுத்த உதவுகிறது.