முதல் இந்திய வீரராக MLC தொடரில் இணைந்துள்ள அஷ்வின்!
29 பங்குனி 2026 ஞாயிறு 16:16 | பார்வைகள் : 222
ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இந்திய வீரராக MLC தொடரில் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின், 2025 ஐபிஎல் தொடருடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
வெளிநாட்டு தொடர்களில் ஆர்வம் காட்டிய அமெரிக்காவில் நடத்தப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம், MLC தொடரில் விளையாட உள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஷ்வின் பெற்றுள்ளார்.
2026 MLC தொடர் வரும் ஜூன் 18 ஆம் திகதி தொடங்கி ஜூலை 18 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இதில், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக அஷ்வின் விளையாட உள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஷ்வின், "மேஜர் லீக் கிரிக்கெட்டில் போட்டியிடும் முதல் இந்திய வீரர் என்ற பொறுப்பை ஏற்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பு, அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த அணி போட்டிகளில் வெற்றி பெற்று அதன் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவுவதும், அதே நேரத்தில் பே ஏரியா ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான கிரிக்கெட்டை வழங்குவதுமே எனது முழுமையான நோக்கமாகும்" என கூறியுள்ளார்.
அஷ்வின் அணியில் இணைந்தது குறித்து பேசியுள்ள அணியின் தலைமை பயிற்சியாளர் கேமரூன் ஒயிட், "முதல் இந்திய வீரரை அணிக்குள் கொண்டு வருவது எங்கள் அணிக்கும், ஒட்டுமொத்த எம்எல்சி க்கும் ஒரு மாபெரும் தருணம்.
ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் போட்டிகளில் வெற்றி பெற உதவுவதற்காகவே அவர் இணைகிறார்.அவருடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2025 - 26 BBL தொடரில் சிட்னி தண்டர் அணியில் அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ILT20 தொடர் ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்தார். ஆனால் எந்த அணியும் அவரை ஏலத்தில் வாங்கவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan