குடியேற்றக் கொள்கையில் கடுமையான மாற்றம்: புதிய தீர்மானம்!!
26 பங்குனி 2026 வியாழன் 16:43 | பார்வைகள் : 4898
ஐரோப்பிய பாராளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே குடியேறிகளை அனுப்பும் “திரும்ப அனுப்பும் மையங்கள்” அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டம் உறுப்புநாடுகள் மூன்றாம் நாடுகளில் இப்படிப்பட்ட மையங்களை உருவாக்க அனுமதிக்கிறது.
இந்த முடிவு, குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி அரசியல் குழுக்கள் இதை ஆதரித்தாலும், இடதுசாரி கட்சிகள் மற்றும் அரசு அல்லாத அமைப்புகள்(ONG) கடுமையாக எதிர்த்து வருகின்றன.
தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேற்ற தீர்மானங்களில் சுமார் 20% மட்டுமே நடைமுறைக்கு வருகிறது. இதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த சட்டத்தின் படி, தஞ்சம் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள மையங்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவ்விடங்களில் அவர்களை தற்காலிகமாக தடுத்து வைக்கும் வாய்ப்பும் இருக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan