Paristamil Navigation Paristamil advert login

கடன்சுமையால் யாழில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

கடன்சுமையால் யாழில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

8 மாசி 2026 ஞாயிறு 12:44 | பார்வைகள் : 316


யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

அவர் வெள்ளிக்கிழமை (06)  வேலைக்கென அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் - அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் நேற்று சனிக்கிழமை (07) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இது குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்