Paristamil Navigation Paristamil advert login

CAN இறுதிப்போட்டி கொண்டாட்டங்கள்: இல்-து-பிரான்சில் 23 பேர் கைது!! 169 அபராதங்கள்!!

CAN இறுதிப்போட்டி கொண்டாட்டங்கள்: இல்-து-பிரான்சில் 23 பேர் கைது!! 169 அபராதங்கள்!!

19 தை 2026 திங்கள் 21:39 | பார்வைகள் : 509


CAN இறுதிப்போட்டியில் செனகல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு பரிஸ் வடகிழக்கு பகுதிகளிலும் Champs-Élysées அவென்னியூவிலும் பெரும் கொண்டாட்டங்கள் நடந்தன. ரபாத்திலிருந்து (Rabat) 2200 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், போட்டி பரிஸிலேயே நடந்தது போல நகரம் முழுவதும் கார் ஹோன் சத்தங்களாலும், கொடிகளாலும், புகைக் குண்டுகளாலும் அதிர்ந்தது. 

பார்பஸ் பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர். ஆனால், ஷாம்-எலிசேயில் ரசிகர்கள் கூடுவதைத் தடை செய்த மாகாண ஆளுநர் உத்தரவை மீறி சிலர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தாண்டினர். எட்டு CRS பிரிவுகள், Brav-M படைகள் மற்றும் பல தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தபோதும், சில இடங்களில் பதற்றம் உருவானது. பட்டாசு எறிதல், வாகனங்களின் மேல் ஏறுதல் போன்ற சம்பவங்கள் நடந்ததால், காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டங்களை கலைத்தனர்.

இந்தச் சம்பவங்களின் விளைவாக, பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சில் மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், Champs-Élyséesஇல் கூடியதற்காக 169 அபராதங்கள், 53 போக்குவரத்து குற்றங்கள் மற்றும் பல குற்ற அபராதங்கள் விதிக்கப்பட்டன. இருப்பினும், காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பொது ஒழுங்கு மீறல்களை கட்டுப்படுத்த உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்