Paristamil Navigation Paristamil advert login

நாடு கடத்தப்பட்ட இரு பிரெஞ்சு நபர்கள்!!

நாடு கடத்தப்பட்ட இரு பிரெஞ்சு நபர்கள்!!

1 மார்கழி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 163


பிரெஞ்சு குடியுரிமை கொண்ட இரு நபர்கள் மொராக்கோவில் இருந்து பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் Toulouse நகர சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

27 மற்றும் 28 வயதுடைய இருவரும் Toulouse  நகரைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் கடந்த சில வருடங்களாக ஸ்பெயின் - பிரான்ஸ் நாடுகளுக்கிடையே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இருவரும் தேடப்பட்டு வந்த நிலையில், ஆபிரிக்க நாடான மொராக்கோவில் தலைமறைவாகியிருந்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் அங்கு வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் பிரான்சுக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் டெலிகிராம் செயலி ஊடாக ’Arai Farmers' எனும் ஒரு என்கிரிப்டட் குழு ஊடாக தகவல்கள் பரிமாறி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர்.

2021 ஆம் ஆம் ஆண்டில் இருந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களது குழுவில் இருந்து மொத்தமாக 40 பேர் வரை கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 15 பேர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்