Paristamil Navigation Paristamil advert login

Mondial Relay மீது சைபர் தாக்குதல்: வாடிக்கையாளர் தரவுகள் கசிவு!!

Mondial Relay மீது சைபர் தாக்குதல்: வாடிக்கையாளர் தரவுகள் கசிவு!!

28 மார்கழி 2025 ஞாயிறு 23:00 | பார்வைகள் : 1388


Mondial Relay நிறுவனம் டிசம்பர் 23 அன்று ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதலின் போது வாடிக்கையாளர்களின் சில தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கக் கூடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றில் பெயர், குடும்பப்பெயர், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் பார்சல் விநியோகத்தை கண்காணிக்க  தேவையான எண், ஆர்டர் எண், விநியோக நிலை போன்ற தகவல்கள் அடங்கும். 

நிறுவனம் இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாகவும், சம்பவம் குறித்து CNIL (Commission nationale de l'informatique et des libertés) அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 

இந்நிகழ்வில் எந்தவிதமான வங்கி விவரங்களும், பயனர் கடவுச்சொற்களும் அல்லது கட்டண தகவல்களும் திருடப்படவில்லை என்று Mondial Relay உறுதி செய்துள்ளது. இருப்பினும், நிபுணர்களின் கருத்துப்படி, இத்தகைய தனிப்பட்ட தகவல்கள் எதிர்காலத்தில் தனிப்பயனாக்கப்பட்ட மோசடி மின்னஞ்சல்கள் போன்ற பிற சைபர் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படலாம். 

சம்பவத்தின் முழுமையான ஆய்வு இன்னும் நடைபெற்று வருவதாகவும், டிசம்பர் 23 மாலைக்குப் பிறகு தரவுகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்