Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

32 பாதிரியார்களை ஏமாற்றி €230,000 யூரோக்கள் மோசடி!!

32 பாதிரியார்களை ஏமாற்றி €230,000 யூரோக்கள் மோசடி!!

26 மார்கழி 2025 வெள்ளி 07:05 | பார்வைகள் : 1886


பரிசில் உள்ள 32 பாதிரியார்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து €230,000 யூரோக்கள் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற பாதிரியார்களுக்கு தொடர்ச்சியாக தொலைபேசியில் அழைத்து, கடிதங்கள் அனுப்பி அவர்களிடம் இருந்து பணத்தினை பெற்றுள்ளார். 'சரிட்டி' அமைப்பு ஒன்றுக்கு இந்த பணத்தை சேகரிப்பதாகவும், ஏராளமான குழந்தைகளை தாம் பராமரிப்பதாகவும் பொய்யான ஆவணங்களை காண்பித்து இந்த பணத்தினை வசூலித்துள்ளார்.

ஆனால் உண்மையில் அவர் தெரிவித்த அனைத்தும் பொய்யான தகவல் எனவும், அவ்வாறான சரிட்டி அமைப்பு எதையும் அவர் நடாத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் மொத்தமாக €230,000 யூரோக்கள் வசூலித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்