Paristamil Navigation Paristamil advert login

Vitry-sur-Seine : வகுப்பு தோழியின் சாவிகளை திருடி வீட்டில் கொள்ளை!!

Vitry-sur-Seine : வகுப்பு தோழியின் சாவிகளை திருடி வீட்டில் கொள்ளை!!

20 மார்கழி 2025 சனி 08:38 | பார்வைகள் : 1534


Vitry-sur-Seine நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு சம்பவத்தில், மூன்று இளைஞர்கள் தங்களுடைய வகுப்பு தோழியின் வீட்டில் திருட்டு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 

தனது சாவிகள் தொலைந்துவிட்டதாக கூறி பள்ளியின் நிர்வாக அலுவலகத்துக்குச் சென்றார். உண்மையில், அவர் சிறிது நேரத்திற்கு முன்பு சாவிகளை தொலைத்திருந்த தனது வகுப்பு தோழியின் சாவிகளைப் பெற முயன்றார். அவை தன்னுடையவை என கூறி, அந்த சாவித் தொகுப்பை எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணின் குடியிருப்பிற்குச் சென்று திருட்டில் ஈடுபட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. 

நகைகள், கடிகாரங்கள் மற்றும் வீடியோ கேம் கருவிகள் உள்ளிட்ட பல மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன; இழப்பு பல பத்தாயிரம் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்துக்குப் பிறகு, 15 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறார்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை முடிவில், அவர்களில் மூன்று பேருக்கு மட்டும் “கூட்டாக உடைத்து திருடுதல்” என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்கள் குழந்தைகள் நீதிபதியின் முன்னிலையில் பின்னர் விசாரிக்கப்படுவார்கள். அதுவரை, நீதிமன்றத்தின் தற்காலிக கல்வி நடவடிக்கையை அரசு வழக்கறிஞர் கோரியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்