லுவர் கொள்ளை! - Aubervilliers இல் ஒருவர் கைது!!
27 ஐப்பசி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 4550
லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளையிட்ட குற்றத்தில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை அறிந்ததே. இருவரில் ஒருவர் Aubervilliers நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக பிந்திக்கிடைந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒக்டோபர் 25, சனிக்கிழமை இரவு இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இருவரில் ஒருவர் சாள்-து-கோல் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 30 வயதுடைய குறித்த நபர், கொள்ளையிடப்பட்ட இடத்தில் கிடைத்த தடயங்களோடு 150 இற்கும் மேற்பட்ட மரபணு மாதிரிகளுடன் ஒத்துப்போகும் முக்கிய குற்றவாளியாகும்.
இரண்டாவது நபர் Aubervilliers நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். எந்த பகுதி என தெரிவிக்கப்படவில்லை. சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan