Paristamil Navigation Paristamil advert login

இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் 'செம்மஞ்சள்' எச்சரிக்கை!!

இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் 'செம்மஞ்சள்' எச்சரிக்கை!!

22 கார்த்திகை 2025 சனி 07:07 | பார்வைகள் : 288


கடுமையான பனிப்பொழிவு காரணமாக இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று நவம்பர் 22, சனிக்கிழமை இல்-து-பிரான்சுக்குள் 7 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாக Météo France அறிவித்த நிலையில், இன்று காலை இந்த எச்சரிக்கையை செம்மஞ்சள் எச்சரிக்கையாக மாற்றியுள்ளது.

பரிஸ் மற்றும் புறநகரங்களில் 1 தொடக்கம் 3 செ.மீ வரை பனி கொட்டும் எனவும், ஏனைய மாவட்டங்களில் 7 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் எனவும், இந்த எச்சரிக்கை இன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணிவரை விடுக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்