Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

நவம்பர் 13! - தாக்குதல் இடம்பெற்ற அனைத்து இடங்களையும் பார்வையிடுகிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

நவம்பர் 13! - தாக்குதல் இடம்பெற்ற அனைத்து இடங்களையும் பார்வையிடுகிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

7 கார்த்திகை 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 2324


நவம்பர் 13 தாக்குதலின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் வரும் 13 ஆம் திகதி வியாழக்கிழமை பிரான்சின் பல்வேறு நகரங்களில் அனுஷ்டிக்கப்பட உள்ளது., ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் Place Saint-Gervais பகுதியில் ‘நவம்பர் 13 தாக்குதலின் நினைவிடத்தை’ திறந்து வைக்கிறார்.

நினைவிடத்தை திறந்து வைப்பதற்கு முன்னர், ஜனாதிபதி மக்ரோன், தக்குதல் இடம்பெற்ற அனைத்து இடங்களையும் ஜனாதிபதி மக்ரோன் பார்வையிட உள்ளார். பரிஸ் மற்றும் அதன் புறநகரங்கள் என மொத்தமாக ஆறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதில் 132 பொதுமக்களும், 7 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டிருந்தனர்.

Stade de France,
rue Faubourg-du-Temple, 
rue Alibert, 
rue de Charonne, 
boulevard Voltaire,
Bataclan

ஆகிய ஆறு இடங்களுக்கும் வரும் வியாழக்கிழம இகாலை அவர் பயணிப்பதாகவும், அங்கு கூடும் மக்களை சந்தித்து உரையாடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்