11% சதவீத அரச ஊழியர்கள் பங்கேற்ற வேலை நிறுத்தம்!!

19 புரட்டாசி 2025 வெள்ளி 12:01 | பார்வைகள் : 1440
நேற்றைய நாள் வியாழக்கிழமை ‘கறுப்பு நாள்’என அடையாளப்படுத்தப்பட்டு பொது போக்குவரத்து, கல்வி, மருத்துவம் என பல துறைகளைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். மொத்தமாக 10.95% சதவீத பொதுப்பணித்துறை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள 2.5 மில்லியன் அரச ஊழியர்களில் 10.9% சதவீதமானவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை முன்னதாக செப்டம்பர் 10 ஆம் திகதி இடம்பெற்ற ”அனைத்தையும் முடக்குவோம்” வேலை நிறுத்தத்தோடு ஒப்பிடுகையில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.
செப்டம்பர் 10 ஆம் திகதி அன்று 4.58% சதவீத அரச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1