அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் தொற்றுநோய் பரவல்- முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

18 புரட்டாசி 2025 வியாழன் 11:04 | பார்வைகள் : 641
அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் தொற்றுநோய் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாப் பகுதியில் தொற்றுகள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மருத்துவமனை ஒன்றில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாயத்தை மீண்டும் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கெய்ர்ன்ஸ் நகரில் கடந்த மூன்று வாரங்களில் ஆறு உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோய்கள் பதிவாகின.
இதனால் அந்நகருக்கு அதிகாரிகள் அவசர பொது சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை, மகப்பேறு மற்றும் சிறப்பு பராமரிப்பு நர்சரி, புற்றுநோய் பராமரிப்பு மையம் உள்ளிட்ட பிரிவுகளில் பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முகமூடிகளை அணிவதை மருத்துவமனை கட்டாயமாக்கியுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1