Paristamil Navigation Paristamil advert login

தப்பித்தது அரசு!!

தப்பித்தது அரசு!!

16 ஐப்பசி 2025 வியாழன் 12:38 | பார்வைகள் : 1606


இன்று காலை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையில் அரசாங்கம் தப்பித்துக்கொண்டது.

Rassemblement national மற்றும் LFI என இரு கட்சிகளும் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா பிரேரணை அடுத்தடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. போதிய வாக்குகள் இல்லாததால் சபாநாயகர் அதனை தள்ளுபடி செய்தார்.

முதலில் LFI கட்சியினரின் பிரேரணைக்கு ஆதரவாக 271 வாக்குகளும், அதனை அடுத்து RN கட்சி கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக 144 வாக்குகளும் பதிவாகின.

இதனால் அரசாங்கம் மயிரிழையில் தப்பித்துக்கொண்டது. பிரேரணை நிறைவேற்ற  489 வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்