வங்கி பரிமாற்றங்கள்: ஒக்டோபர் 9 முதல் புதிய பாதுகாப்பு நடவடிக்கை
14 ஐப்பசி 2025 செவ்வாய் 20:54 | பார்வைகள் : 4507
ஒக்டோபர் 9, 2025 முதல், அனைத்து வங்கிகளும் பயனாளி (bénéficiaire) சரிபார்ப்பு முறையை அமல்படுத்த வேண்டும் என பிரான்ஸ் மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின ஆணையின் மூலம் நிறைவேற்றப்படுகின்றது. இநதப் புதிய பாதுகாப்பு நடவடிக்கை தற்போது நடைமுறைப்படுத்தபப்பட்டுள்ளது.
இந்த புதிய ஐரோப்பிய ஒழுங்குமுறை வங்கி பரிமாற்றங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய பயனாளி சரிபார்ப்பு முறை (VoP - Verification of Payee):
யூரோ மண்டலம் முழுவதும் பணம் மாற்றல் சேவை வழங்குநர்களால் (வங்கி) அமல்படுத்தப்படும்
இது இலவசம் மற்றும் பயனர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது
முக்கிய நோக்கங்கள்:
மோசடிகள், முக்கியமாக அடையாள மோசடிகள் மற்றும் வங்கி இலக்க அடையாளமான RIB மோசடி போனறவற்றிற்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்துதல்
பயனாளி சேர்க்கும் போது ஏற்படும் பிழைகளைக் குறைத்தல்
செயல்படும் முறை:
கடன் பரிமாற்றம் செய்யும் போது, வங்கி பயனாளியின் வங்கியை தானாகவே கேள்வி கேட்டு, பெயர் மற்றும் IBAN எண் பொருந்துகிறதா என சரிபார்க்கும்.
இதன் முடிவுகள்:
முழு பொருத்தம்: பரிமாற்றம் நிறைவேற்றப்படும்
பொருத்தமின்மை: பரிமாற்றத்திற்கு முன் உங்களுக்கு அறிவிக்கப்படும்
பகுதி பொருத்தம்: IBAN உடன் தொடர்புடைய உண்மையான பெயர் தெரிவிக்கப்படும்
சரிபார்ப்பு சாத்தியமில்லை: தொழில்நுட்ப பிரச்சனை - தொடரவோ கைவிடவோ முடியும்
பயனர் கட்டுப்பாடு:
பரிமாற்றத்தை உறுதிப்படுத்த, திருத்த அல்லது இரத்து செய்யும் சுதந்திரம் பயனருக்கு உள்ளது. இந்த புதிய முறை பண பரிமாற்றங்களை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan