அக்டோபர் 9 முதல் வங்கி பரிமாற்றங்களில் பெறுநரின் அடையாளம் கட்டாய சோதனை!!
4 ஐப்பசி 2025 சனி 14:20 | பார்வைகள் : 5735
அக்டோபர் 9 முதல், யூரோவுக்கு உட்பட்ட வங்கிகள், SEPA பரிமாற்றங்களில் பெறுநரின் பெயரும், IBAN எண்ணும் பொருந்துவதை கட்டாயமாகச் சரிபார்க்க வேண்டும். இதனால் “அம்மா” அல்லது “கடன் தொகை” போன்ற பெயர்களுடன் பணம் அனுப்ப முடியாது. பெயர் மற்றும் கணக்கு எண்கள் பொருந்தவில்லை என்றால், அனுப்புநருக்கு உடனடியாக எச்சரிக்கை வழங்கப்படும். அவர் பரிமாற்றத்தை நிறுத்தவோ, தொடரவோ முடிவு செய்யலாம். இந்த மாற்றம் பரிமாற்ற மோசடிகளை (183 மில்லியன் யூரோ வரை) குறைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகிறது.
இது யூரோ வட்டார நாடுகளுக்கு மட்டும் பொருந்தும். பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள், மற்றும் பிரான்சின் பசிபிக் பகுதிகள் (நியூ கலிடோனியா, போலினேசியா) இதற்கு உட்பட்டதல்ல. இதுவரை வங்கிகள் IBAN எண்ணை மட்டுமே சரிபார்த்தன, ஆனால் இப்போது பெறுநரின் அடையாளத்தை உறுதி செய்வது கட்டாயம். இது தவறான பரிமாற்றங்களுக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பு இல்லாத சூழலை தவிர்க்கும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan