அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட ரணில்

23 ஆவணி 2025 சனி 14:49 | பார்வைகள் : 919
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் மிகுந்த சோர்வு காரணமாக ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசியவைத்தியசாலையில் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1