முன்னாள் அமைச்சர்களுக்கு சகலவித கொடுப்பனவுகளும் நிறுத்தம்!!
16 புரட்டாசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 5287
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சகலவித கொடுப்பவுகளையும் நிறுத்துவதற்குரிய ஒப்பந்தத்தில் பிரதமர் Sébastien Lecornu கைச்சாத்திட உள்ளார்.
வரவுசெலவுத்திட்டத்தில் 40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு எனும் கனவுடன் ஆரம்பித்த பிரான்சுவா பெய்ரூவின் திட்டம் பொய்த்துப்போக, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து அவர் அரசாங்கத்தை விட்டு வெளியேறியிருந்தார். இந்நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட Sébastien Lecornu, சர்ச்சைக்குரிய விடயம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். பிரான்சில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் ‘வாழ்நாள் கொடுப்பனவுகள்’ திட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறார்.
”அச்சுறுத்தலுக்கு உள்ளான மக்களை பாதுகாப்பது குடியரசுக்கு இயல்பானது என்றாலும், தற்காலிக அந்தஸ்து (அமைச்சு பதவி) காரணமாக வாழ்நாள் முழுவதும் சலுகைகளைப் பெறமுடியும் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது” என பிரதமர் Sébastien Lecornu செப்டபர் 15, நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகளை அடியோடு நீக்குவது அல்லது, அதனைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் ஜனவரி 1, 2026 ஆம் ஆண்டு முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan