குழந்தைகளில் அதிக எடையைப் பற்றிய விழிப்புணர்வு திட்டங்கள் பலனளிக்கவில்லை!!!
11 புரட்டாசி 2025 வியாழன் 19:01 | பார்வைகள் : 2421
பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ள இளம் பெற்றோர்களுக்கான குழந்தைவளர்ப்பு விழிப்புணர்வு திட்டங்கள் பெரும்பாலும் பயனளிக்கவில்லை என ஒரு சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெற்றோர்கள் சத்தான உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் திரைநேரக் கட்டுப்பாடு பற்றிய தகவல்களை பெற்றிருந்தாலும், அவர்களது குழந்தைகள் அபாயத்தில் இருந்து பாதுகாக்கப்படவில்லை. The Lancet மருத்துவ இதழில் வெளியான இந்த ஆய்வு 8 நாடுகளில் நடைமுறையில் இருந்த 17 திட்டங்களைப் பகுப்பாய்வு செய்தது.
ஆய்வாளர்கள், தனிநபர் நடத்தை மாற்றங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டது போதாது என்றும், அரசுத் தீர்வுகள் மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்துகின்றனர். அதாவது, சத்தான உணவுகளுக்கான அணுகலை மேம்படுத்தல், பசுமை இடங்களை அதிகரித்தல், ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான விளம்பரங்களை கட்டுப்படுத்தல் போன்ற பொதுப் பணிகள் தேவையென கூறப்படுகிறது. 2050க்குள் உலகில் பாதி பெரியவர்களும் அதிக எடையுடன் இருப்பர் என்ற எச்சரிக்கையும் மேற்கொண்டு அறிவுறுத்தப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan