Paristamil Navigation Paristamil advert login

“நான் கூடைப்பந்து அணியின் தலைவராக இருக்க ஆசைப்பட்டதாக கூட சொல்லமாட்டீர்களா?” : எம்பாப்பே!!!

“நான் கூடைப்பந்து அணியின் தலைவராக இருக்க ஆசைப்பட்டதாக கூட சொல்லமாட்டீர்களா?” : எம்பாப்பே!!!

25 ஆடி 2025 வெள்ளி 21:32 | பார்வைகள் : 3209


பரிஸ் 2024 ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற கடைசி வீரராக இருக்க , கிலியன் எம்பாப்பே பங்கேற்க மறுத்ததாக Le Canard Enchaîné வார இதழ் தெரிவித்துள்ளது. ஆனால், பிரான்ஸ் அணியின் கேப்டனான எம்பாப்பே இதை மறுத்து, இது பொய்யான செய்தி என இன்று தனது X கணக்கில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் நையாண்டியாக, “நான் கூடைப்பந்து அணியின் தலைவராக இருக்க ஆசைப்பட்டதாக கூட சொல்லமாட்டீர்களா?” என தெரிவித்துள்ளார். மேலும், “நான் ஒலிம்பிக் நடைபெற்ற நேரத்தில் எந்த வரலாறும் இல்லாமல் விடுமுறையில் இருந்தேன், எனவே கடைசி ஒளிக்கதிர் ஏற்ற வீரராக இருக்க வேண்டிய அவசியமில்லை” என்றும் கூறியுள்ளார். இறுதியில், அந்த பங்கு டெடி ரினர் (Teddy Riner) மற்றும் மாரி-ஜோசே பெரெக் (Marie-José Pérec) ஆகியோருக்கே வழங்கப்பட்டது.