யாழில். நண்பியின் நம்பிக்கை துரோகம் - பெண் எடுத்த விபரீத முடிவு
17 ஆவணி 2025 ஞாயிறு 09:14 | பார்வைகள் : 1699
யாழ்ப்பாணத்தில் நண்பி செய்த நம்பிக்கை துரோகத்தால் குடும்ப பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
உயிர்மாய்த்த பெண்ணின் நண்பி ஒருவர் , கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , தனது மகனின் திருமண செலவுக்கு என குடும்ப பெண்ணிடம் 25 பவுண் நகைகளை வாங்கி அடகு வைத்து பணத்தினை பெற்றுள்ளார்.
அந்நிலையில் , நீண்ட நாட்களாகியும் , அடகு வைத்த நகைகளை மீட்டு , கொடுக்காததால் , உயிர்மாய்த்த பெண் பல தடவைகள் தனது நண்பியிடம் , நகைகளை திருப்பி கேட்டு வந்துள்ளார்.
அவரும் நகையை மீட்டு கொடுக்காது தொடர்ச்சியாக ஏமாற்றி வந்த நிலையில் , கடும் விரக்தியில் இருந்த பெண் நேற்றைய தினம் சனிக்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் என மரண விசாரணைகளில் உயிர்மாய்த்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan