சமூக நல வீட்டிலிருந்து வெளியேற்றபட்ட போதைப்பொருள் விற்ற குடும்பம்!!!
12 ஆடி 2025 சனி 23:11 | பார்வைகள் : 9720
Val-d’Oise மாவட்டத்தில், Argenteuil உள்ள சமூக வீடொன்றில் வசித்து வந்த குடும்பம், 27 வயதான மகன் போதைப்பொருள் வியாபாரம் செய்த காரணத்தால் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டனர்.
காவல்துறையினர் அவரது வீட்டில் 2.3 கிலோ கனாபிஸ் (cannabis) என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்ததற்குப் பிறகு, வீட்டு உரிமையாளர் AB Habitat மற்றும் வால்-டி'ஓய்ஸின் நிர்வாக அதிகாரியின் ஒத்துழைப்பு டன், வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இம்மகன் 2024 மார்ச் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார். இந்தச் செயல்முறை 2024 ஆம் ஆண்டு தொடங்கி, ஜனவரி 2025 இல் முடிவுக்கு வந்துள்ளது.
வல்-டி'ஓய்ஸின் நிர்வாக அதிகாரியான Philippe Court, குற்ற செயல்கள் வீட்டின் அமைதியையும் அண்டை வீட்டாரின் வாழ்வையும் பாதிப்பதாக இருந்தால், வீட்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என்றும் வீட்டு உரிமையாளர், அவரது குடும்ப உறுப்பினர்களின் நடத்தைக்குப் பொறுப்பாளராக இருக்க வேண்டும் என்றும், வீட்டு அருகில் நடந்த குற்றங்களுக்கு இந்த நடவடிக்கைகளும் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan