ஒரே நேரத்தில் இரு மாணவிகள் மீது காதல் - தவறான முடிவெடுத்த யாழ் பல்கலைக்கழக மாணவன்
27 சித்திரை 2025 ஞாயிறு 09:38 | பார்வைகள் : 9861
காதல் பிரச்சினை காரணமாக பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
யாழ். பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் 24 வயதான கொட்டகலையைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ். பல்கலைகழகம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவிகள் இருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பு, சண்டையில் முடிந்ததால் இவர் தவறான முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan