Paristamil Navigation Paristamil advert login

இலங்கை பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

இலங்கை பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

13 பங்குனி 2025 வியாழன் 05:10 | பார்வைகள் : 14043


2025 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

​மேலும், முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஏப்ரல் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.