Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க வரி விதிப்பு - இலங்கை ஜனாதிபதியால் விசேட குழு நியமிப்பு

அமெரிக்க வரி விதிப்பு -  இலங்கை ஜனாதிபதியால் விசேட குழு நியமிப்பு

3 சித்திரை 2025 வியாழன் 15:22 | பார்வைகள் : 4200


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரி தொடர்பில் அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். 

பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொள்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர், வெளியுறவு அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரப் ஒமர், ஷெராட் அமலீன் மற்றும் சைப் ஜெபர்ஜி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.