இலங்கையில் ரயிலில் செல்பி எடுத்த வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி
1 சித்திரை 2025 செவ்வாய் 14:25 | பார்வைகள் : 3595
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற எல்லா ஒடிஸி ரயிலில் பயணித்த ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், செல்ஃபி எடுக்க ரயில் நடைமேடையில் தொங்கியபோது இரும்பு கம்பத்தில் மோதி ரயிலில் இருந்து விழுந்து காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மலையக ரயில் பாதையில் நானுஓயா மற்றும் அம்பேவெல ரயில் நிலையங்களுக்கு இடையில், திங்கட்கிழமை (31) மாலை நடந்த இந்த விபத்தில் காயமடைந்த பெண், 27 வயதுடைய ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஆவார்.
அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்து கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு பயணித்த எல்ல ஒடிஸி ரயிலில் எல்லவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அவர் மற்ற சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் எல்லாவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ரயிலின் நடைமேடையில் தொங்கி செல்ஃபி எடுக்க முயன்றபோது, ரயில் பாதைக்கு அருகில் இருந்த இரும்புக் கம்பத்தில் மோதி, ஓடும் ரயிலில் இருந்து விழுந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹப்புத்தளை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan