Paristamil Navigation Paristamil advert login

மாவைக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

மாவைக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

31 தை 2025 வெள்ளி 10:09 | பார்வைகள் : 14190


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து இன்று  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31)  இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்குஇன்று  விஜய் செய்த நிலையிலேயே மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.