நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அழைப்பாணை
13 மாசி 2025 வியாழன் 05:28 | பார்வைகள் : 13332
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நாளை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி திஸ்ஸ விஹாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு , போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தப் பகுதிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் ஒரு குழுவுடன் வந்து தையிட்டி திஸ்ஸ விஹாரைக்கு முன்னால் கறுப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இந்நிலையிலேயே, இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan