சொந்த பிள்ளைகளை கடத்திய.. - தந்தை கைது!!
22 தை 2025 புதன் 18:16 | பார்வைகள் : 13694
5 மற்றும் 3 வயதுடைய இரு பிள்ளைகள் கடத்தப்பட்ட குற்றத்தில் அவர்களது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
Beuvrages (Nord) நகரில் இச்சம்பவம் ஜனவரி 20, திங்கட்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. 5 வயதுடைய முகமட் எனும் சிறுவனும், 3 வயதுடைய நஸீம் எனும் சிறுவனும், பகல் 1.10 மணி அளவில் rue Jean-Jaurès வீதியில் வைத்து கடத்தப்பட்டார்கள்.
அவர்கள் கடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதன் பின்னர், உடனடியாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். முதலாவது சந்தேகநபராக அப்பிள்ளைகளின் தந்தை அடையாளம் காணப்பட்டார். 38 வயதுடைய அவர், வட ஆபிரிக்காவைச் சேர்ந்தவர் எனவும், அவரது BD-761-QQ இலக்கமுடைய Audi A3 மகிழுந்து அடையாளம் காணப்பட்டு, உடனடியாக பிள்ளைகள் மீட்கப்பட்டதாகவும், இருவரும் பூரண நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளை கடத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan