சொந்த பிள்ளைகளை கடத்திய.. - தந்தை கைது!!
22 தை 2025 புதன் 18:16 | பார்வைகள் : 13166
5 மற்றும் 3 வயதுடைய இரு பிள்ளைகள் கடத்தப்பட்ட குற்றத்தில் அவர்களது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
Beuvrages (Nord) நகரில் இச்சம்பவம் ஜனவரி 20, திங்கட்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. 5 வயதுடைய முகமட் எனும் சிறுவனும், 3 வயதுடைய நஸீம் எனும் சிறுவனும், பகல் 1.10 மணி அளவில் rue Jean-Jaurès வீதியில் வைத்து கடத்தப்பட்டார்கள்.
அவர்கள் கடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதன் பின்னர், உடனடியாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். முதலாவது சந்தேகநபராக அப்பிள்ளைகளின் தந்தை அடையாளம் காணப்பட்டார். 38 வயதுடைய அவர், வட ஆபிரிக்காவைச் சேர்ந்தவர் எனவும், அவரது BD-761-QQ இலக்கமுடைய Audi A3 மகிழுந்து அடையாளம் காணப்பட்டு, உடனடியாக பிள்ளைகள் மீட்கப்பட்டதாகவும், இருவரும் பூரண நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளை கடத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan