யாழில் மண்ணெண்ணெய் அருந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

10 தை 2025 வெள்ளி 16:16 | பார்வைகள் : 4643
யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது.
கோப்பாய் பகுதியை சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது.
தாயார் சமையல் வேளையில் ஈடுபட்டிருந்த வேளை, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து , மண்ணெண்ணெய்யை குழந்தை அருந்தியுள்ளதுடன் அதனை தனது உடலிலும் ஊற்றி விளையாடியுள்ளது.
மண்ணெண்ணெய் மனம் வரவே தாய் சென்று பார்த்த போது , உடல் முழுவதும் மண்ணெண்ணெய்யுடன் குழந்தை காணப்பட்டதை அடுத்து , குழந்தையை மீட்டு , கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். அதன் போது குழந்தை உயிரிழந்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1