வடக்கில் இராணுவ முகாம் அகற்றம் - நாமல் விசனம்
20 கார்த்திகை 2024 புதன் 14:08 | பார்வைகள் : 12749
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய ஒருங்கிணைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வட மாகாணத்தில் இராணுவ முகாம் அண்மையில் அகற்றப்பட்டமை மற்றும் எதிர்வரும் மாதங்களில் மேலும் பல முகாம்களை அகற்ற திட்டமிட்டுள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
மக்களுக்கு நிலத்தை மீள விடுவிப்பது பிரச்சினை இல்லை என்றாலும், தேசிய பாதுகாப்பில் விட்டுக்கொடுப்பு சமரசம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப் படைகளுடன் கலந்தாலோசித்து அத்தகைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தினார்.
“30 வருடகால பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை போராடியது, இன்று அனைத்து சமூகங்களும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திரத்தை அனுபவிக்கின்றன” என ராஜபக்ச குறிப்பிட்டார்.
வடக்கு அல்லது தெற்காக இருந்தாலும், புவியியல் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், தேசிய பாதுகாப்பைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan