போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக ஒரு மாதம் தடை விதிக்கப்பட்ட NZ கிரிக்கெட் வீரர்
19 கார்த்திகை 2024 செவ்வாய் 08:57 | பார்வைகள் : 6532
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல்லுக்கு (Doug Bracewell) போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் சென்ட்ரல் ஸ்டாக்ஸ் மற்றும் வெலிங்டன் இடையேயான உள்நாட்டு டி20 போட்டிக்குப் பிறகு சோதனை செய்யப்பட்டதில், அவர் கோகைன் பயன்படுத்தியது உறுதியானது.
இந்த போட்டியில் பிரேஸ்வெல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார், பின்னர் 11 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
இவ்வாறு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
ஆனால், அப்போட்டியின்போது போதைப்பொருளை பயன்படுத்தியதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் வீரருக்கு விளையாட்டு ஒருமைப்பாடு ஆணையம் ஒரு மாத தடை விதித்தது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு கோகோயின் உட்கொள்ளப்பட்டதால், அவருக்கு குறைந்த தண்டனை கிடைத்தது.
ஆரம்பத்தில், மூன்று மாத தண்டனை ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு மாத இடைநீக்கம் ஏப்ரல் 2024 வரை நிறுத்தப்பட்டது.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஏற்கனவே தனது தடையை முடித்துவிட்டார், எந்த நேரத்திலும் கிரிக்கெட் விளையாடுவதை மீண்டும் அனுமதிக்கபடுவார்.
இச்சம்பம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்துள்ளது. ஆனால், நியூசிலாந்து விளையாட்டு ஒருமைப்பாடு ஆணையம் இன்று தான் (நவம்பர் 18) தடை குறித்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan