சீனாவில் தொடரும் படுகொலை... 8 பேர் பலி
18 கார்த்திகை 2024 திங்கள் 13:36 | பார்வைகள் : 5907
சீனாவில் ஒரு வாரத்திற்குள் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 17 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தொழில்பயிற்சி கல்லூரி ஒன்றில் பயின்ற பழைய மாணவர் ஒருவர், நேற்று, கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
குறித்த பழைய மாணவர், கத்தியை பயன்படுத்தியே இந்த கொலைகளை செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது அங்கு விரைந்த பொலிஸார் குறித்த பழைய மாணவரை கைது செய்துள்ளனர்.
பரீட்சை சித்தியெய்தமையால், பட்டமளிப்பு நிகழ்வுக்கு தாம் அழைக்கப்படவில்லை என்ற ஆத்திரமே, 21வயதான குறித்த மாணவரின் இந்த செயலுக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, கடந்த திங்கட்கிழமையன்று, விவகாரத்து வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தியில்லை என்ற காரணத்தினால் ஆத்திரமடைந்த 62 வயதான ஒருவர், காலை நேர உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது வேண்டுமென்றே காரை செலுத்திய சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டு, 45 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan