Paristamil Navigation Paristamil advert login

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை - பீதியில் மக்கள்

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை - பீதியில் மக்கள்

17 மார்கழி 2024 செவ்வாய் 06:01 | பார்வைகள் : 6064


பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது.

இதனால் வானுவாட்டு தீவை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்