இஸ்ரேல் மீது மறுபடியும் எச்சரிக்கை விடுத்த ஈரான்
16 ஐப்பசி 2024 புதன் 14:49 | பார்வைகள் : 14061
இஸ்ரேல் நாடானது காசா மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் முன்னெடுத்தால் வலுவான மற்றும் வருந்ததக்க பதிலடிக்கு தயார் என இஸ்ரேல் தொடர்பில் முக்கிய அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த ஈரான் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.
இஸ்ரேலின் எந்தவொரு சாகசங்களுக்கும் தீர்க்கமான மற்றும் வருந்தத்தக்க பதிலடிக்கு ஈரான் முழுமையாக தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 1 ஆம் திகதி சுமார் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது.
இந்த விவகாரத்தில் தகுந்த பதிலடி உறுதி என்றே இஸ்ரேல் கூறி வருகிறது.
ஆனால், இஸ்ரேல் அல்லது அமெரிக்க நிர்வாகம் ஈரான் மீதான பதிலடிக்கு முடிவெடுக்கவில்லை என்றே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கருத்தை பரிசீலிப்போம் என்றும், இறுதி முடிவு இஸ்ரேல் நாட்டின் நலன் கருதி முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பெய்ரூட்டில் செப்டம்பர் 27 ஆம் திகதி இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் ஹிஸ்புல்லா படைகளின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஈரானிய ராணுவ தளபதி உட்பட முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கான பதிலடியாகவே, ஈரான் அக்டோபர் 1ம் திகதி ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan