தனுஷ் இயக்கும் படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கின்றனர்?
17 புரட்டாசி 2024 செவ்வாய் 14:35 | பார்வைகள் : 5915
’பா.பாண்டி’ மற்றும் ’ராயன்’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ள தனுஷ், தற்போது ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், விரைவில் ரிலீஸ் ஆகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்ததாக, தனுஷ் இயக்கும் நான்காவது படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும், ’திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பிறகு நித்யா மேனன் மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். அசோக் செல்வன், சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
’இட்லி கடை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, ஏற்கனவே அவர் இரண்டு பாடல்கள் கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக தயாரிப்பாளர் ஆகாஷ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தமே இல்லாமல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan