இத்தாலியில் விமான விபத்து.. மூன்று பிரெஞ்சுக்காரர்கள் பலி!
20 புரட்டாசி 2024 வெள்ளி 18:39 | பார்வைகள் : 11526
இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் மூன்று பிரெஞ்சு நபர்கள் பலியாகியுள்ளனர். மூவர் பயணிக்கக்கூடிய சிறிய விமானம் ஒன்றே விபத்துக்குள்ளானது.
கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இத்தாலியின் Tuscany மற்றும் Emilia-Romagna ஆகிய நகரங்களுக்கிடையே வைத்து காணாமல் போயிருந்தது. பின்னர் குறித்த விமானம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், விமானத்தில் பயணித்த மூன்று பிரெஞ்சு பயணிகளும் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான காலநிலையினால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan