இலங்கையில் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த தந்தை
30 ஆவணி 2024 வெள்ளி 13:47 | பார்வைகள் : 6019
தெஹியத்தகண்டிய, சேருப்பிட்டிய பிரதேசத்தில் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளது.
தெஹியத்தகண்டிய , சேருப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலின் போது, உயிரிழந்தவரது மனைவியும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மகனின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan