Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பிற்காக 12 நாடுகளுக்கு அழைப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பிற்காக 12 நாடுகளுக்கு அழைப்பு

23 ஆவணி 2024 வெள்ளி 16:13 | பார்வைகள் : 15446


ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு உள்ளிட்ட சகல செயற்பாடுகளையும் அவதானித்து அறிக்கையொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்