Château de Rambouillet கோட்டைக்குள் நுழைந்து பணம் திருடிய ஒருவர் கைது..!
2 ஆடி 2024 செவ்வாய் 13:56 | பார்வைகள் : 18519
Yvelines மாவட்டத்தில் உள்ள Château de Rambouillet கோட்டைக்குள் நுழைந்து, €5,000 யூரோக்கள் பணம் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடன் ஒருவர், குறித்த கோட்டையின் ஜன்னல் வழியாக உள் நுழைந்துள்ளார். பின்னர் அங்கிருந்து €5,000 யூரோக்கள் பணத்தினை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
அவசர சமிக்ஞை ஒலிக்கவிடப்பட்டு காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டனர். பின்னர் கண்காணிப்பு கமராவின் உதவியோடு குறித்த திருடன் தேடி கண்டுபிடிக்கப்பட்டார். 27 வயதுடைய குறித்த நபர் Loiret நகரில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan