Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கு மேல் நேரடியாக உச்சம் கொடுக்கும் சூரியன் - பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு மேல் நேரடியாக உச்சம் கொடுக்கும் சூரியன் - பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

28 ஆவணி 2023 திங்கள் 06:39 | பார்வைகள் : 8951


இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும்  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்று மதியம் 12.11 மணியளவில் கோவிலன் முனை மற்றும் மல்லாகம் (யாழ்ப்பாணம் மாவட்டம்) ஆகிய பகுதிகளில் சூரியனின் உச்சம்  மிகவும் அதிகமாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த 10 நாட்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் நீர் அருந்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்