மீண்டும் உருவாக்கப்படும் நஹேல் கொலைக்களம்!!
5 வைகாசி 2024 ஞாயிறு 07:58 | பார்வைகள் : 14444
கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பிறகு கடந்த ஜுன் மாதம் 27ம் திகதி காவற்துறைச் சோதனைக்கு இணங்காமல் சிற்றுந்தைச் செலுத்திய 17 வயதுடைய நஹேல் காவற்துறை வீரனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது தற்காப்பு நடவடிக்கை என காவற்துறை வீரனால் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் அறிக்கை காவற்துறையினர் மீதான காவற்துறை விசாரிப்புப் பிரிவான IGPN (inspection générale de la police nationale) வழங்கியிருந்தது.
எனினும் நீதித்துறை இந்தச் சம்பவத்தை மீண்டும் அதே களத்தில் மீளமைக்க உள்ளது. இது நாளை ஞாயிற்றுக்கிழமை மீளுருவாக்கப்பட உள்ளது.
நோந்தேரில் அதே இடத்தில் அப்படியே மீளமைத்து அந்தச் சம்பவத்தை நீதித்துறை விசாரிக்க உள்ளது. காவற்துறை வீரனின் வாக்குமூலம் சரியானது தானா என நீதித்துறை ஆய்வு செய்ய உள்ளது.
இதில் நஹேலின் தாயாரின் சார்பில் சட்டத்தரணியும் கலந்து கொள்ள உள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan