RER B : தொடருந்துக்குள் வைத்து கத்திக்குத்து தாக்குதல்! - ஒருவர் படுகாயம்!!
1 வைகாசி 2024 புதன் 06:01 | பார்வைகள் : 13927
RER B தொடருந்துக்குள் வைத்து ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 29 ஆம் திகதி, திங்கட்கிழமை மாலை 5.30 மணி அளவில் இச்சம்பவம் Le Bourget (Seine-Saint-Denis) நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. தொடருந்தில் பயணித்த 30 வயதுடைய ஒருவரை, ஆயுததாரி ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். கைகளில், தொடையில், முதுகில் என குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
அதையடுத்து, அவர் உயிருக்காபத்தான. நிலையில் Pitié-Salpêtrière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் மேற்கொண்டவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது, குறித்த தொடருந்து நிலையத்துக்கு அருகே வைத்து கைது செய்யப்பட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan