Rosny-sous-Bois : பத்தாவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன்!
28 சித்திரை 2024 ஞாயிறு 17:41 | பார்வைகள் : 11240
சிறுவன் ஒருவர் பத்தாவது தளத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளான். Rosny-sous-Bois நகரில் இச்சம்பவம் நேற்று ஏப்ரல் 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
ஒன்பது வயதுடைய சிறுவன் ஒருவனே படுகாயமடைந்துள்ளான்.. சனிக்கிழமை நண்பகலின் பின்னர் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு, படுகாயமடைந்த சிறுவன் மீட்கப்பட்டான். அவன் உடனடியாக பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குறித்த சிறுவன் அவனது பெற்றோர்களுடன் பத்தாவது தளத்தில் வசிக்கும் நிலையில், பெற்றோர்கள் கவனிக்காத போது ஜன்னல் வழியாக விழுந்துள்ளதாக அறிய முடிகிறது. எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan