சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி இவரா?
18 வைகாசி 2024 சனி 10:06 | பார்வைகள் : 11648
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் அவரை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை, சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ’அமரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ’டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சிபி சக்கரவர்த்தி திரைக்கதை அமைக்கும் பணியை முடித்துவிட்டு, வசனம் எழுதும் பணியை தொடங்கி விட்டதாகவும் கூடவே இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வையும் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான ’அனிமல்’ படத்தின் வெற்றியை அடுத்து நயன்தாராவை விட அதிகம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ராஷ்மிகா, சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தில் இணைவதை அடுத்து அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan